வெறுமையாய் இருக்கிறது மனது, வெளியில் தெரியும் வானம் போலே.
எப்பொழுதும் நண்பர்கள் சூழ சிரிப்பும் களிப்பும், கும்மாளமுமாக போய் கொண்டிருக்கும் வாழ்க்கை படகு, திடீரென்று தனியாய் ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது போல ஒரு எண்ணம்.
தேவை தான் இப்படி ஓரம் கட்டின அனுபவங்கள் நம் வாழ்க்கையில், நிறுத்தி, நிதானமாய் சிந்திக்க...
இது போன்ற சமயத்தில் தான் நாம் வளர்ந்துவிட்டிருப்பது தெரியும். நம் எண்ணங்களில் தெளிவு தோன்றும். வார்த்தைகளில் அமைதி நிலவும்.
அலங்காரத்திற்கு வைத்திருந்த பொருள் பிள்ளைகள் கைபட்டு உடைந்து விட்ட போதும், பிள்ளைகள் மனம் உடைந்து விடக்கூடாதே என்பதில் கவனம் திரும்பும். "பரவாயில்லை, போகட்டும்", என்று மனது ஆறுதல் கொள்ளும்.
அழுக்காய் கிடக்கிறது வீடு. "அதற்கென்ன இப்பொழுது. சுத்தம் செய்தால் ஆயிற்று. நம் வீடு. நாம் தானே செய்ய வேண்டும்", என்று மேலும் சமாதனம் செய்யும்.
மடிக்க வேண்டிய துணிகள் பெருகிக் கிடக்க, மனம் ஏனோ இன்று படம் வரைவதில் மும்முரம் காட்டும்.
விடாப்பிடியாய் ஒலிக்கும் தொலை பேசியின் கைபேசியை வீட்டின் மூலைகளில் நிதானமாய் தேடும்.
காலையில் அலாரம் வைக்க மறந்த கணவரை மலர்ந்த முகத்துடன் வாழ்த்தும். அலுவலகத்தில் தாமதத்தை அருமையாய் விளக்கும் - "கொஞ்சம் தூங்கி விட்டேன்", என்று.
நீண்டு கொண்டே போகும் பிள்ளைகளின் கதைகளில் உண்மை ஆர்வம் காட்டும்.
மலர்ந்து நிற்கும் மல்லிகைப் பூக்களை ஆசையாய் மணக்கும். உதிர்ந்து கிடக்கும் பூக்களை விரல்கள் கேசத்தில் சொருகும்.
அமைதி நிலவும் புல்லின் வெளியில் கொஞ்சம் தலை சாய்க்கும்.
வெறுமையாய் விரிந்த வானத்தின் அழகை கண்கள் ருசிக்கும். ஒரு திட்டில்லாமல் ஒரே சீராய் அமைந்த ஊதா நிறத்தை நெஞ்சம் ரசிக்கும்.
எனக்காகவே, என் ஒருத்திக்காகவே தினமும் மாற்றப்படும் இந்த ஆகாய ஓவியத்திற்காய் மனம் நன்றி சொல்லும். இறைவனின் கலைநயத்தை எண்ணி எண்ணி வியக்கும்.
சிரிப்பும், களிப்பும், கும்மாளமும், உல்லாசமும் வெகு விரைவில் மீண்டும் தொடரும்.
அது வரை நெஞ்சம் இளைப்பாறும், கொஞ்சம் உங்களோடு...
எப்பொழுதும் நண்பர்கள் சூழ சிரிப்பும் களிப்பும், கும்மாளமுமாக போய் கொண்டிருக்கும் வாழ்க்கை படகு, திடீரென்று தனியாய் ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது போல ஒரு எண்ணம்.
தேவை தான் இப்படி ஓரம் கட்டின அனுபவங்கள் நம் வாழ்க்கையில், நிறுத்தி, நிதானமாய் சிந்திக்க...
இது போன்ற சமயத்தில் தான் நாம் வளர்ந்துவிட்டிருப்பது தெரியும். நம் எண்ணங்களில் தெளிவு தோன்றும். வார்த்தைகளில் அமைதி நிலவும்.
அலங்காரத்திற்கு வைத்திருந்த பொருள் பிள்ளைகள் கைபட்டு உடைந்து விட்ட போதும், பிள்ளைகள் மனம் உடைந்து விடக்கூடாதே என்பதில் கவனம் திரும்பும். "பரவாயில்லை, போகட்டும்", என்று மனது ஆறுதல் கொள்ளும்.
அழுக்காய் கிடக்கிறது வீடு. "அதற்கென்ன இப்பொழுது. சுத்தம் செய்தால் ஆயிற்று. நம் வீடு. நாம் தானே செய்ய வேண்டும்", என்று மேலும் சமாதனம் செய்யும்.
மடிக்க வேண்டிய துணிகள் பெருகிக் கிடக்க, மனம் ஏனோ இன்று படம் வரைவதில் மும்முரம் காட்டும்.
விடாப்பிடியாய் ஒலிக்கும் தொலை பேசியின் கைபேசியை வீட்டின் மூலைகளில் நிதானமாய் தேடும்.
காலையில் அலாரம் வைக்க மறந்த கணவரை மலர்ந்த முகத்துடன் வாழ்த்தும். அலுவலகத்தில் தாமதத்தை அருமையாய் விளக்கும் - "கொஞ்சம் தூங்கி விட்டேன்", என்று.
நீண்டு கொண்டே போகும் பிள்ளைகளின் கதைகளில் உண்மை ஆர்வம் காட்டும்.
மலர்ந்து நிற்கும் மல்லிகைப் பூக்களை ஆசையாய் மணக்கும். உதிர்ந்து கிடக்கும் பூக்களை விரல்கள் கேசத்தில் சொருகும்.
அமைதி நிலவும் புல்லின் வெளியில் கொஞ்சம் தலை சாய்க்கும்.
வெறுமையாய் விரிந்த வானத்தின் அழகை கண்கள் ருசிக்கும். ஒரு திட்டில்லாமல் ஒரே சீராய் அமைந்த ஊதா நிறத்தை நெஞ்சம் ரசிக்கும்.
எனக்காகவே, என் ஒருத்திக்காகவே தினமும் மாற்றப்படும் இந்த ஆகாய ஓவியத்திற்காய் மனம் நன்றி சொல்லும். இறைவனின் கலைநயத்தை எண்ணி எண்ணி வியக்கும்.
சிரிப்பும், களிப்பும், கும்மாளமும், உல்லாசமும் வெகு விரைவில் மீண்டும் தொடரும்.
அது வரை நெஞ்சம் இளைப்பாறும், கொஞ்சம் உங்களோடு...