Algebra படுத்தும் பாடு...

இரண்டு நாட்களுக்கு முன் என் இரண்டாவது மகள் தன் வீட்டுப்பாடத்தை (home work) நான் சரி பார்க்க என்னிடம் கொண்டு வந்தாள். எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். அல்ஜீப்ரா. புது பாடம்.

பரவாயில்லை நன்றாக புரிந்திருக்கிறாளே என்று யோசித்து முடிக்கவே ஒரு தவறு கண்ணில் பட்டது.

y=mx+b then what is b? என்பது தான் கேள்வி.

அவளது பதில்: b=mx+y / mx என்று இருந்தது.

அந்த கணக்கை மீண்டும் செய்யச் சொன்னேன். மீண்டும் அதே பதில் தான் எழுதினாள். ஏதோ தன் steps-ஐ explain-ம் செய்தாள்.

சரி பிள்ளைக்கு புரியவில்லை என்று கொஞ்சம் விளக்க ஆரம்பித்தேன்.

இல்லை. நீங்கள் சொல்வது தவறு. இது தான் சரி. இப்படித்தான் எங்கள் டீச்சர் சொல்லித் தந்தார்கள், என்று அடம் பிடித்தாள்.

நானும் விடுவதாய் இல்லை. என் விளக்கத்தை மீண்டும் எடுத்துரைத்தேன். b=y-mx என்று.

எங்கள் டீச்சர் சொல்லியிருக்கிறாங்க, multiplied numbers-ஐ equavation-க்கு அடுத்த side கொண்டு போணும்னா divide பண்ணனும், என்று நிறைய பேசினாள்.

இதில் வேறு, 'உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நீங்கள் இந்தியாவில் படித்திருக்கிறீர்கள். இது அமெரிக்கா. இங்கு வேறு மாதிரி', என்று விளக்கம்.

எதுவும் பலிக்காத பட்சத்தில் நோட்டை தூக்கிக்கொண்டு பத்தாம் வகுப்பில் படிக்கும் தன் அக்காவிடம் கொண்டு சென்றாள்.

அக்கா என்ன படித்திருந்தாளோ என்னவோ, "ஆமாம் நீ சொல்வது தான் சரி" என்று சொல்லி விட்டாள்.

எனக்கு தலையே சுற்றி விட்டது, 'நீயுமா?' என்று.

அவளை விட்டு விட்டு இனி இவளுக்கு விளக்க ஆரம்பித்தேன். இவள் புரிந்து கொண்டால் அவளை விளக்கி விடுவாளே என்ற யோசனையில்.

சரி, 100 = 25+b என்று இருந்தால், what is b? என்றேன்.

அது 75 என்றார்கள் டான் என்று.

சரி, அப்படியானால், y=mx+b என்பதும் அதே ரீதியில் செய்ய வேண்டியது தானே என்றேன்.

Mommy, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? mx means m is multipled by x. It is not a single whole number என்றார்கள்.

சரி, அப்படியானால், 100= 5X5 +b என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போ பதில் என்ன? என்றேன். பதில் இல்லை.

இது அக்கா காரியை கொஞ்சம் யோசிக்க வைத்தது. "ம்ம்ம்... நீங்கள் சொல்வதும் சரி போல் தான் இருக்கிறது. Sharon சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது", என்றாள்.

Sorry Mommy, எனக்கு தலை ஓடமாட்டேங்கிறது. தூக்கம் வருகிறது" என்று தப்பிக்க பார்த்தாள்.

"இதை புரிந்து கொண்டு தூங்கினால் போதும்", என்று ஒரு பேப்பரும் pen-னுமாய் அவளை தொடர்ந்தேன்.

ம்ஹூம் கொஞ்சமும் பயன் இல்லை. குழம்பித்தான் போயிருந்தார்கள்.

திடீரென்று flash back-ல் கணக்கு பாடம் படிக்க அம்மாவை நான் படுத்திய பாடு வந்து போகவே சத்தமாய் சிரித்தே விட்டேன்.

அவளைத்தான் சிரிப்பதாக எண்ணிக்கொண்டு, கோபமாய் "உங்களை விட Daddy-க்கு கணக்கு நல்லா தெரியும்", என்று Daddy-யிடம் கொண்டு சென்றாள்.

மற்றவள் இது தான் சாக்கு என்று தப்பித்தாள்.

டாம் டூம் என்று கீழிருந்து பலவித சத்தங்கள் கேட்டன. Daddy-யாச்சு மகளாச்சு என்று விட்டு விட்டேன்.

கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தாள் முகத்தை நீளமாக வைத்துக்கொண்டு.

'என்ன மக்களே ஆச்சு. புரிஞ்சிச்சா பிள்ளைக்கு' என்றேன்.

அவ்வளவு தான். அழுதே விட்டாள்.

"Daddy-யும் நீங்கள் சொல்வது தான் சரி என்கிறார்கள். நான் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன்" என்றாள்.

'I hate Algebra. I hate Math. I don't understand anything' என்று ஆரம்பித்தாள்.

சரி சரி இனியும் ஏதாவது சொல்லி விஷயம் விபரீதமாக மாறி விடக்கூடாதே என்ற பயத்தில், 'That's alright மக்களே. Go to bed now. Ask your teacher to explain it to you tomorrow' என்றேன்.

மறு நாள் மாலையில், 'So, what happened with that problem?' என்று வினவினேன்.

'Yeah. She explained it' என்றாள்.

'Wasn't I right?' என்றேன் ஆர்வமாய்.

'No! Daddy was!' என்றாள் அழுத்தமாய்.

கவலையே வேண்டாம். இவள் பிழைத்துக்கொள்வாள். என்று நிம்மதி பெருமூச்சொன்று தானாய் வந்தது.

மூத்தவள்? அவளும் பிழைத்துக்கொள்வாள். கவலையை விடுங்கள்.

சின்னவன்? அவனும் தான். கட்டாயமாய்.

~ NRIGirl

1 comments: (+add yours?)

KParthasarathi சொன்னது…

குழந்தைகளுக்கு டீச்சர் சொல்வதுதான் சரி என்கிற திடமான நம்பிக்கை.சற்று முரட்டு பிடிவாதம் கூட..நீங்களும் விடவில்லை.கடைசியில் எல்லாம் நல்ல விதமாக முடிந்தது.