அன்பான விசாரிப்பு

அன்புள்ள உங்களுக்கு அன்புடன் NRIGirl எழுதுகிறேன்,

நீங்க எப்ப இந்த தளத்திற்கு வந்தாலும் ஒரு புது கடிதமாவது இருக்கணும் உங்களுக்காக என்பது என் விருப்பம். அதனால் தான் மீண்டும் எழுதுகிறேன். நல்லா இருக்கீங்களா?

எனக்கு எப்போ கடைசியா கடிதம் வந்தது என்று யோசித்துப்பார்த்தேன். ரொம்ப நாளாச்சி.

ஆனா பாருங்க, அன்னிக்கு மார்ச் 1-ஆம் தேதி காலண்டரை புது பக்கத்துக்கு திருப்பும்போது கீழே ஒரு தாள் விழுந்தது. என்னன்னு பார்த்தா ஒரு அழகான கடிதம் - அந்த காலண்டரை எங்களுக்கு அனுப்பி வைத்த குடும்ப நண்பரிடம் இருந்து - புதுவருட வாழ்த்து சொல்லி எழுதியிருந்தாங்க.

எதிர்பாரா நேரத்தில் கிடைத்ததாலோ, அல்லது நிறைய வருடம் கழித்து கைப்பட எழுதின ஒரு கடிதத்தை பார்த்ததாலோ ரொம்ப சந்தோஷமா இருந்தது. மார்ச் முடித்து ஏப்ரல் வந்தாச்சு, இன்னும் நான் அவங்களுக்கு பதில் எழுதல - அது வேற விஷயம்.

நம்ம ஒருத்தங்களுக்கு என்ன தான் செய்யமுடியும்? எத்தனை ரூவா கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம் அன்பான விசாரிப்பில் கிடைக்கும் என்கிறது என்னோட அபிப்பிராயம். சிலருக்கு இப்படி அன்பை வெளிப்படுத்துவதில் ஒரு வெட்கம் போல. அவங்க உண்மையிலேயே ரொம்ப சந்தோஷத்தை அதன் மூலம் இழக்கிறாங்க.

கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு friend-க்கு ஒரு புது உடை கொடுத்தேன் - எனக்கு அது சிறியதாயிருந்ததாலும், பிள்ளைகள் அதை போட மறுத்ததாலும். இன்னிக்கு அந்த friend-டோட அம்மாவை பார்த்தேன். அவங்க கண்ணீர் மல்க எனக்கு நன்றி சொன்னாங்க. அவங்க சொன்னாங்க, "நானும் இந்த அமெரிக்கா வந்து பத்து இருபது வருஷம் ஆகுதம்மா. எனக்கு இருப்பதும் ஒரே மகா. என் கணவரும் இல்ல. மகளையும் கட்டி குடுத்து அப்புறம் நானும் இங்கேயே வந்துட்டேன்-மா. இது வரை ஒருத்தராவது எனக்கோ என் பிள்ளைக்கோ ஒரு பொருள் தந்தது கிடையாது-மா. நீ தான் தந்திருக்கே.", என்று.

ஒண்ணுமே எதிர்பார்க்காமல் ஒரு சின்ன பொருள் ஒருத்தங்களுக்கு குடுத்து பாருங்க, அந்த சந்தோஷமே தனி தான்.

உங்களை வளர்த்து இன்று ஆளாக்கிவிட்டிருக்கிற உங்க பெற்றோருக்கோ, நீங்க அப்பளம் கேட்டவுடன் பொரித்து தந்த உங்க சித்திக்கோ, இளநீர் வெட்டித்தந்த மாமாக்கோ, மல்லிகப்பூ கொஞ்சம் வைத்துவிட்ட பக்கத்துவீட்டு aunty-க்கோ முடிந்தால் ஒரு கடிதம், குறைந்த பட்சம் ஒரு phone call போட்டு பாருங்க, அவங்க அவ்ளோ சந்தோஷப்படுவாங்க. அதுக்கு மேல நீங்க சந்தோஷப்படுவீங்க. 

எங்க கிளம்பிட்டீங்க? கடிதம் எழுதவா? ஆச்சரியமாயிருக்கே! சரி, நானும் அப்படியே அந்த கலண்டர் அணுப்பித்தந்த அந்த Uncle-க்கு இப்பவே ஒரு பதில் எழுதிடுறேன்...

என்றும் அன்புடன்,

~NRIGirl

4 comments: (+add yours?)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கொடுப்பது தான் என்றும் மகிழ்ச்சி... அதுவே சிறப்பு...

KParthasarathi சொன்னது…

பெறுவதை விட மற்றவர்களுக்கு கொடுப்பதில் தான் இன்பம்.
எவ்வளவு கொடுக்கிறோம் என்பதைவிட எவ்வளவு அன்பும் நேசமும் அதில் இருக்கிறது என்பது முக்கியம். Joy is in giving to the needy. வெளியில் தெரியாமல் கொடுப்பது மிகவும் உயர்ந்தது.

Paradesi at New York சொன்னது…

அதோட வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது

NRIGirl சொன்னது…

ரொம்ப சரியா சொன்னீங்க எல்லோரும். இப்ப கொடுத்ததை சொல்லிட்டோமே-னு தான் கஷ்ட்டமாயிருக்கு...